காதல் இன்று மாறி வட்டது நிறையவே மாறி விட்டது.ஒரு காலத்தில் உயிரோடு உறைந்த காதல் இன்று வெறும் பொழுது போக்கு சாதனமாக மாறிவிட்டது.ஏன் இந்த நிலை? காதல் என்றாலே தொலைபேசியில் மணிகணக்காக பேசுவது யாரும் செல்லாத படத்திற்கு ஜோடியாக செல்வது என மாறி விட்டது.ஒரு காலத்தில் கடிதம் வழியே காதல் செய்தனர் அப்போது காதல் காதலாக இருந்தது. ஆனால் இன்றோ மாறி விட்டது.ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டுமே குறிகோளாக உள்ளது இன்றைய பெரும்பாலான காதலர்களிடம். இந்த நிலை மாற வேண்டும் இனியாவது உண்மை காதல் மலரட்டுமே ...... இப்போதெல்லாம் காதல் இயல்பாக வரும் வரை யாரும் காத்திருப்பது இல்லை, பொறுமை இல்லை இவர்களுக்கு .நிறைய பேர் 18 வயது ஆனதும் காதல் என்பது அவசியம் என்று எண்ணுகின்றனர்.எனவே காதலை வர வைக்கின்றனர்.இது மாற வேண்டும் நிச்சயமாக.காதல் என்றில்லை உலகத்தில் உள்ள எந்த உறவாக இருந்தாலும் அதன் அடிநாதமாக இருபது நம்பிக்கை மட்டுமே அனால் இன்று பல பேர் காதலில் அதை பார்க்க முடிவதில்லை.தான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வர சற்று தாமதமானாலும் சந்தேகம் வருகிறது.இதுவா உண்மையான காதல் ?? இல்லை இல்லவே இல்லை.இவர்கள் எல்லாம் என்னை பொறுத்த வரை காதல் என்ற போர்வையில் தங்கள் பருவ பசி போக்க துடிப்பவர்கள் .இவர்களை போன்றவர்களால் காதல் தன புனிதத்தை இழந்து வருகிறது என்பதே உண்மை.காதல் என்றால் என்ன தெரியுமா தன்னுடைய காதலனையோ காதலியையோ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்,முத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்,கை விரல் தொட்டாலும் தொடா விட்டாலும்,பேசினாலும் பேசா விட்டலும்,விரும்பியவனை திருமணம் செய்தாலும் செய்யாமல் போனாலும்,வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அவனோ அவளோ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ன்று மனமார நினைபதே உண்மை காதல்.இந்த எண்ணம் இருந்திருந்தால் காதலை ஏற்கவில்லை என்பதற்காக அமிலம் வீசி இருக்க மாட்டான்.காதல் தன இலக்கணம் அறிவீர் உண்மையாக காதல் செய்வீர்
naan idhuvarai
Saturday 30 March 2013
Friday 16 November 2012
admire the world
மனிதா மனிதா ஏன் இந்த ஓட்டம்
ஓடுகிறாய் ஓடி கொண்டே இருக்கிறாய்
நிறுத்து உன் ஓட்டத்தை ரசி உன்னை சுற்றி உள்ள அனைத்தையும்
அனைத்தையும் ......ரசி ............
தினம் ஒரு கோலம் வானில் இடும் மேகங்கள் ...........
மின்சாரம் இல்லாத இரவுகளில் செல்ல முத்தம் கொடுக்கும் கொசு ...........
மலையின் முகடுகளில் வெறும் புல்லாய் மாறும் மரங்கள் ...........
சில நேரங்களில் அலாரமாய் மாறும் தூரத்து தொடர்வண்டியின் ஓசை ..........
இவை அனைத்தையும் ரசி ...........
ரசனையோடு உலகை பார்பவனுக்கு எல்லாமே அழகு .............
குருதியை அவன் திரவ ரோஜா என்பான்
சிறு துளி கடலாகும் எறும்புக்கு
சமுத்திரம் பானமாகும் இவனுக்கு
நிலவின் கறைகளை சிதறிய திருஷ்டி பொட்டு என்பான்
கண்கள் ஒளி இழந்தால் தேடலின் தொடக்கம் என்பான்
வாழுங்கள் உங்கள் வாழ்வை முழுமையாக
முட்ட முட்ட வாழ்வை அனுபவி
பொத்தானை அழுத்தியே மருத்து போன உன் விரல்களுக்கு மலர்களால்
ஒத்தடம் கொடு
இனியாவது வாழ் .........
ஓடுகிறாய் ஓடி கொண்டே இருக்கிறாய்
நிறுத்து உன் ஓட்டத்தை ரசி உன்னை சுற்றி உள்ள அனைத்தையும்
அனைத்தையும் ......ரசி ............
தினம் ஒரு கோலம் வானில் இடும் மேகங்கள் ...........
மின்சாரம் இல்லாத இரவுகளில் செல்ல முத்தம் கொடுக்கும் கொசு ...........
மலையின் முகடுகளில் வெறும் புல்லாய் மாறும் மரங்கள் ...........
சில நேரங்களில் அலாரமாய் மாறும் தூரத்து தொடர்வண்டியின் ஓசை ..........
இவை அனைத்தையும் ரசி ...........
ரசனையோடு உலகை பார்பவனுக்கு எல்லாமே அழகு .............
குருதியை அவன் திரவ ரோஜா என்பான்
சிறு துளி கடலாகும் எறும்புக்கு
சமுத்திரம் பானமாகும் இவனுக்கு
நிலவின் கறைகளை சிதறிய திருஷ்டி பொட்டு என்பான்
கண்கள் ஒளி இழந்தால் தேடலின் தொடக்கம் என்பான்
வாழுங்கள் உங்கள் வாழ்வை முழுமையாக
முட்ட முட்ட வாழ்வை அனுபவி
பொத்தானை அழுத்தியே மருத்து போன உன் விரல்களுக்கு மலர்களால்
ஒத்தடம் கொடு
இனியாவது வாழ் .........
Thursday 15 November 2012
naan idhuvarai: prostitution
naan idhuvarai: prostitution: no girl is born with aim to be a prostitute but it is only because of some compulsion they do so. so let us understand their situati...
Friday 26 October 2012
sel sel sel........
செல் ........... செல் ...............
என அனுப்பினேன் .......
என் காதலை அந்த
செல்லின் (mobile) வழியே ..............
அவனிடம் சென்று சேர்ந்ததா ? ? ?
தெரியவில்லையே ! ! !
என் செல் (mobile) இன்னும் சினுங்கவில்லையே
Subscribe to:
Posts (Atom)